Powered By Blogger

திங்கள், 16 டிசம்பர், 2013

வலைப் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்





சாலை பாது காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பத்திரிகைகளும்,தொலைக் காட்சி சேனல்களும் அதிக அளவு அக்கறை காட்டுவதில்லை.   

வலைப் பதிவர்கள் அனைவரும் வரும் சாலை பாதுகாப்பு வாரத்தில் ‘சாலை பாதுகைப்பு விழிப்புணர்வு’’ ஏற்படுத்தும் வகையில் அவரவர்களுக்கு தெரிந்த விபத்து தடுப்பு வழிகளை தங்கள் வலைத்தளங்களில் எழுதினால் பெரும் அளவில் இந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த முடியும். 

எனவே சாலை பாதுகாப்பு வாரம் முழுவதும் (1.1.2013 முதல் 7.1.2013 வரை) அனைத்து பதிவர்களும் சாலையைப் பயன்படுத்துவோர் பாதுகாப்புக்காக அவரவர்களுக்கு தோன்றும் ஆலோசனைகளை (அவரவர் பிளாக்குகளில்) பதிவு செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன். (அல்லது அவரவர் பதிவுகளின் கீழ் சாலை பாதுகாப்பு ஸ்லோகன்களை இடம் பெறச்செய்யலாம்)

இதை மற்ற பதிவு உலக நண்பர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
என் முயற்சியால் ஒரேயொரு விபத்து குறைந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் ஏனெனில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் சிரமங்களையும் அதிகம் உணர்ந்தவன் நான்— நண்பர்களே உதவுவீர்களா?
அன்புடன்
அவைநாயகன் எனும் நா.சபாபதி  

(என் முந்திய வருடத்திய பதிவின்மறு பதிவு)

---------------------------------------------------------------------------------------------------------------------------------- Night doubles traffic troubles.

இரவு  போக்குவரத்து தொல்லைகளை இட்டிப்பாக்கும்

--------------------------------------------------------------------------------------------------------

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
      தங்கள் வலைப்பதிவுகளின் கீழ் ஓரிரு வரிகளில் சாலை பாதுகாப்பு குறிப்புகளை இடம்பெறச்செய்ய வேண்டுகிறேன். நன்றி

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.