Powered By Blogger

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

பயணிகள் விபத்துக்கு காரணமாகலாமா?



வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் கூட விபத்து ஏற்படக் காரணமாகி விடுகிறார்கள்.. பத்திரமாக  தங்கள் ஊருக்கு போகத்தானே விரும்புவார்கள் பயணிகள். அப்படியிருக்க அவர்களே விபத்துக்களுக்குக் காரணமாவது எப்படி?  

ஓடும் வண்டியில் ஏறக்கூடாது, இறங்கக்கூடாது, படியில் நின்று பயணம் செய்யக்கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்தவைதான் ஆனாலும் இதனை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள். பேருந்தின் உள்ளே ஏறும் வழிக்கு எதிரே நின்று கொண்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த கண்டக்டர் திடீரென்று டிரைவர் பிரேக் போட்டதால் பேருந்திலிருந்து கீழேவிழுந்தார். அப்படி விழுந்தவர் தலையில் அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டார். கி ட்ட தட்ட ஒரு வருடகலம் கோமாவிலிருந்தார் என்றால் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எவ்வளவு கஷ்டங்கள். ஓடும் பேருந்தில் நின்று கொண்டே செல்லக்கூடிய  அனுபவம் உள்ள நடத்துனருக்கே இந்த கதி என்றால் மற்றவர்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!. 

“கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்”’ என்று எல்லாப் பேருந்து  களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள்.. யாராவது இப்படி கை, தலை வெளியே வைத்திருப்பவர் களை கண்டக்டர், டிரைவர்  பார்த்தால்  உடன் எச்சரிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஒருசிலர் யார் என்ன சொன்னாலும் கேட்பதில்லை.  எதிரே வரும் அல்லது  முந்திச் செல்லும் வாகனத்தினால் கை, தலையில் அடிபட்டு பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். எனவே பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கை, தலையை வெளியே வைக்காமல் பயணம் செய்வது நல்லது..

பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் சந்தோஷமாகப் பயணம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக சத்தம் போட்டு ஆடிப் பாடுவது ஓட்டுனரின் கவனத்தை திருப்புவதாக அமைந்துவிடக்கூடாது.

கார்களில் பயணம் செய்பவர்கள் திடீரென்று வலது புறம் திரும்புங்கள் இடது புறம் திரும்புங்கள் என்று ஓட்டுனரிடம் சொல்லக்கூடாது, எங்கு போகவேண்டும் எப்படி போகவேண்டும் என்று முன்னதாகவே ஓட்டுனரிடம் சொல்லிவிடுவது நல்லது பல விபத்துக்களைத் தவிர்க்கவும் இது உதவும்..

எப்பொழுதும் காரின் இடது  புறம் மட்டுமே இறங்கவேண்டும், வலது புறக்கதவைத் திறந்துகொண்டு இறங்கக்கூடாது. அப்படி வலது புறம் இறங்கினால் பின்னால் வரும் காரோ அல்லது மோட்டர் சைக்கிளோ உங்கள் மீது மோதிவிடக்கூடும். இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பயணம் செய்தால் விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

திங்கள், 21 மார்ச், 2011

விபத்துக்களின் கோர விளைவுகள்

 

செப்டம்பர் 19, 1999 அன்று           எடுக்கப்பட்ட ஜேக்குலினுடைய படம்







1998 இல் ஜேக்குலினும்                 அவளது தந்தையும்
ஜேக்குலின் குழந்தையாக       இருந்த போது எடுத்த  படம்
ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் ஜேக்குலின்


ஜேக்குலின் பயணம் செய்த காரின் புகைப்படம் இது.,  குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவன் ஓட்டிவந்த கார் ஜேக்குலின் பயணம் செய்த கார் மீது மோதியது.. இது டிசம்பர் 1999 இல் நடந்தது. 
 விபத்துக்குப் பிறகு   ஜெக்குலினுக்கு 40க்கும் மேற்பட்ட        அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டனவாம்



ஜேக்குலின் எரியும் காரில் மாட்டிக்கொண்டார். அவளது உடல் மிக மோசமாக தீயில் பாதிக்கப்பட்டது




.கார் விபத்தில் மாட்டிக் கொண்ட எல்லோரும் இறந்து விடுவதில்லை.  .விபத்து நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. டாக்டர்கள் சிகிச்சை தொடர வேண்டி இருந்தது



விபத்துக்களின்  கோர விளைவுகளைப் பாருங்கள்

திங்கள், 14 மார்ச், 2011

விபத்தி்ற்கான காரணங்கள் (தொடர்ச்சி)

சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் பல தவறுகள் சாலை விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. பாதசாரிகள் என்றால் சாலையைப் பயன்படுத்தும் யாரோ சிலர் என்று நினைக்க வேண்டாம். ஒரு விதத்தில் நாம் அனைவரும் சில நேரங்களில் பாதசாரிகள்தான். கார், வேன், பேருந்து, லாரி போன்றவற்றை ஓட்டுபவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கூட அவரவர் வாகனங்களிலிருந்து இறங்கி சாலையைப் பயன்படுத்தும்போது அவர்களும் பாதசாரிகள் தானே!
பாதசாரிகள் சாலையின் வலதுபுற ஓரத்திலேயே நடந்து செல்ல வேண்டும், அப்போதுதான் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்ல முடியும்.. இடது புற ஓரமாக நடந்து சென்றால் நம் பின்னே வரும் வாகனமே நம்மீது மோதிவிட்டுப் போய்விடக்கூடும்.இதை மறந்து விடக் கூடாது.
“ஸீப்ரா க்ராஸிங்” என்று சொல்லக்கூடிய பாதசாரிகள் சாலையைக் கடப் பதற்கான குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாலையைக்கடக்க வேண்டும். சாலையைக் கடப்பதற்கு வசதியாக மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ இருக்கும் இடங்களில் அவற்றைப்பயன்படுத்தியே சாலையைக் கடக்கவேண்டும். அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்பைத்தாண்டிக்கொண்டு சாலையைக் கடப்பது சரியான செயலாகுமா?
சிக்னல்களில் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரியும் போது  மட்டுமே சாலையைக் கடக்கவேண்டும். வாகனம் ஏதும் வரவில்லை என்றால்கூட பச்சை விளக்கு இல்லாத நேரத்தில் கடக்கக் கூடாது. ஏனென்றால் மற்றொரு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பச்சை விளக்கு எரிவதால் மிக வேகமாக அந்த இடத்தைக் கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வரலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
சாலையில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் சாலை ஓரத்திலேயே வீடுகள் இருக்கலாம். வீட்டிலிருந்து படி இறங்கி னாலே  சாலையில் கால் வைப்பதாக இருக்கும். அது போன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் கவனமாக வாகனத்தை ஓட்டவேண்டும்.
மழை நேரங்களில் சாலையில் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும்.. எல்லோருமே தண்ணீரில் கால் வைக்காமல் நடக்கவே முயற்சிப்பார்கள் கிட்டதட்ட சாலையின் நடுப்பகுதிக்கே கூட அவர்கள் வந்துவிடக்கூடும். அது போன்ற நேரங்களில் மிக மிக எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.
பேருந்து நிறுத்தங்களில் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிய உடன் சாலையின் மறுபக்கமிருக்கும் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ அல் லது வங்கிக்கோ செல்வதற்காக பேருந்தின் முன்பாகவோ அல்லது பின்பக்கமாகவோ சாலையைக்கடக்க முயற்சிப்பார்கள். அது போன்ற நேரங்களில் இதை நினைவில் வைத்துக்கொண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கவனமாக ஓட்டவேண்டும். .





செவ்வாய், 1 மார்ச், 2011

கனமழை விபத்துக்கள்












கனமழை விபத்துக்களை உருவாக்குகின்றன.
மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஹஸரோ நகரின் நெடுஞ்சாலை களிலும், தெருக்களிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.. மழை பெய்து கொண்டே இருப்பதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதுடன் பல பகுதிகளில் விபத்துக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன, வெள்ளத்தாலும் விபத்துக்களாலும் மக்கள் பெருந்துயருக் குள்ளாகின்றனர்.


Dense fog causes accidents in Punjab, two dead
Updated at 1040 PST Thursday, December 23, 2010



லாகூர்: பஞ்சாபில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் குறைந்த பட்சம் இரண்டு பேர் உயிரிழந்நார்கள் என ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ரவி டோல் பிளாஸா அருகில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பத்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு லாரி டிரைவர் இறந்து போனார், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
முல்டான் ரோடு என்ற இடத்தில் ஒரு வாகனம் லாரியோடு மோதிய விபத்தில் காரோட்டி கொல்லப்பட்டார்.

சாலைக்கு வரும் விலங்குகள்


விலங்குகள் சாலையில் திரியும் போது அவைகூட  விபத்தை ஏற்படுத்தக்கூடும்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

விபத்துக்கான இன்னும் சிலகாரணங்கள்

விபத்துக்களை ஏற்படுத்தும் மற்ற காரணங்கள்
சாலையிலுள்ள குறைபாடுகள்கூட விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. மேடான சாலையில் ஏறும்போதும், திருப்பத்தில் வாகனத்தைத் திருப்பும் போதும் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எதிரே வாகனம் வருவது தெரியாமல் வேகமாக ஓட்டிச் செல்லும் போது எதிர்பாராமல் திடீரென  அவை எதிரெதிராக வருகின்ற நிலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. சாலை நல்ல நிலையில் இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள நிலையிலும், அங்கங்கே தண்ணீர்தேங்கியுள்ள நிலையிலும் ஓட்டுனர்கள் பல்லம் குழியைத் தவிர்த்து நல்ல பகுதியில் ஓட்ட முற்படுவார்கள். இதே போல எதிரே வரும் வாகன ஓட்டியும் செயல்படும் போது வாகனங்கள் மோதிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
சாலை ஓரத்தில் ஜல்லியை கொட்டியும், தார் டின்களை சேகரித்து வைப்பதும் சாலை பழுதுபார்க்கம் எந்திரங்களை நிறுத்தி வைப்பதும் கூட விபத்துக்களை ஏற்படுத்தும். எனவே சாலை நல்ல நிலையில் பராமரிக்கப் படுவதும் விபத்துக்களைத் தவிர்க்க உதவும்.
சாலையில் சரியான அளவில், சரியான முறையில் அமைக்கப்படாத, வண்ணம் தீட்டப்படாத, முன் அறிவிப்பு வைக்கப்படாத வேகத்தடைகள் விபத்துக்குக் காரணம் ஆகின்றன. இவை குறிப்பாக இருசக்கர வாகனங்களின் விபத்துக்களுக்கு பெரும்பாலும் காரணமாக உள்ளன. எனவே வேகத்தடை களை சரியான அளவில் அமைப்பதுடன் அவை நன்கு தெரியும்படிமஞ்சள் வண்ணம் தீட்டி, அறிவிப்புப் பலகையும் வைத்தால் வாகன ஓட்டிகள் கவனமாகப் பார்த்து ஓட்ட வசதியாக இருக்கும்: விபத்துக்களையும் தவிர்க்கலாம்.
டயர் பஞ்சர் ஆவது, திடீரென வாகனம் பழுதாவது, இயந்திர பாகங்கள் உடைந்து போவது போன்ற வாகனத்தில் ஏற்படும் குறைபாடுகள் விபத்துக்களுக்குக் காரணமாகின்றன, இதே போல எதிரே வரும் வாகனத்தில் ஏற்படும் இயந்திரக்கோளாறுகளும் நமது வாகனத்தின் விபத்துக்குக் காரணம் ஆகிவிடலாம். இவ்வித விபத்துக்களுக்கு ஓட்டுனர்கள் காரணமில்லை என்றாலும் கூட எதையும் எதிர் பார்த்து ஓட்டுவதும், அதிவேகமாக  ஓட்டாமல் இருப்பதும் இவ்விபத்துக்களின் பாதிப்பு அதிகமாகாமல் இருக்க உதவ முடியும். முன்னெச்சரிக்கை பராமரிப்பின் (preventive maintenance) மூலம் வாகனங்களை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள முடியும்- அதனால் இது போன்ற விபத்துக்களே ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளவும் முடியும்.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

விபத்திற்கான காரணங்கள்


விபத்துக்கான  காரணங்கள்
சாலை விபத்துக்களுக்கு கீழே உள்ள பல காரணங்கள் இருக்கின்றன.:
  1. வாகன ஓட்டிகளின் தவறுகள்
  2. சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளின் தவறுகள்
  3. ஓட்டுனருடன் இருக்கும் நடத்துனர், உதவியாளர் போன்றோர் செய்யும் தவறுகள்.
  4. வாகனத்தில் பயணம் செய்யும் பயணிகள் செய்யும் தவறுகள்.
  5. சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் தவறுகள்.
  6. வாகனத்தில் ஏற்படும்  கோளாறுகள்
  7. பிற வாகனங்களில் ஏற்படும்  கோளாறுகள்
  8. சாலைகளில் உள்ள குறைபாடுகள்.
  9. சாலையைப் பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகள்.
  10. சாலையில் திரியும்  கால்நடைகள்.
  11. தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள்.
  12. போதிய  வெளிச்சம் இல்லாமை
இந்தக் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். போதிய  வெளிச்சம் இல்லாமை எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பகல்  நேரத்தில் சாலையிலுள்ளவை அனைத்தும் தெளிவாகத் தெரிவதால் சுலபமாக வாகனங்களை ஓட்ட முடியும். ஆனால் இரவு நேரத்திலோ எங்கும் இருட்டாக இருப்பதால் வாகனத் தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்திலேயே ஓட்ட வேண்டும். எனவே போதிய வெளிச்சமின்மையால் மிகக்கவனமாகவே ஓட்டவேண்டும். விடியல் காலை நேரத்திலும், மாலை அந்தி  சாயும் நேரத்திலும் நாம் கவனமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டுக்கொண்டு சென்றாலும் எதிரே வருபவர்  விளக்கை  எரியவிடாமல் வரக்கூடும்.. அதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உண்டு.

தட்ப வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி விபத்துக்களுக்குக் காரணமாக அமைகின்றன? பனி பெய்யும் நேரத்தில் சாலை பனியால் முழுமையாக மறைக்கப்படும் ஆபத்து உண்டு.  விமான ஓடுதளம்  பனி நேரத்தில் சரியாகத்தெரியாததால் விமானங்கள் ரத்து செய்யப்படு வதை பார்க்கிறோம். பாதை தெரியாத அது போன்ற நேரங்களில் மிக  மிகக் கவனமாக ஓட்டுவது அவசியம்.

அடுத்து மழை விபத்துக்கு ஒரு பெரிய காரணமாக  அமைகிறது. மழை பெய்யும் நேரங்களில் என்ன தான் வைப்பர்கள் வேலை செய்தாலும்கூட ,பாதை முழுவதும் சரியாகத் தெரியாது. எதிரே வரும் வாகனங் களையோ பாதசாரிகளையோ சரியாகப்பார்க்க முடியாது அதுவும் கனமழையாக இருந்தால் நிலைமை இன்னும்  மோசமாக இருக்கும். எனவே மழை பெய்யும் நேரங்களில் பாதுகாப்பான வேகத்தில் கவனமாக ஓட்டவேண்டியது அவசியம்.. மழை நேரங்களில் ஏன் வேகமாகப் போகவில்லை என கேட்கமாட்டார்கள். மாறாக இவ்வளவு மழையிலும் நம்மை பத்திரமாக கொண்டுவந்து சேர்த்தாரே என்றுதான் சொல்வார்கள். எனவே குறைவான வேகத்தில் கவனமாக ஓட்டுவதே சிறந்தது.

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

விபத்தைத் தவிர்ப்போம்-

விபத்தை ஏற்டுத்து பவர்களுக்கும், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பல விதத்தில் கஷ்டங்ளும் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்து ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம்.

விபத்துக்கள் ஏறபடாமல் தடுக்க விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சாலை விதிகளை மதிக்காதது, பின்பற்றாதது.
2. வாகனத்தை ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது.
3. அதிக வேகமாக ஓட்டுவது. (சரியான வேகத்தில் ஓட்டாதது)
இதைப் படித்தால் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுனர்கள்தான் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். மற்ற காரணங்கள் பல இருந்தாலும் அவை மிகக்குறைவான விபத்துக்களையே ஏற்படுத்துகின்றன.
எல்லா காரணங்களைப் பற்றியும் விரிவாக பின்னர் பார்ப்போம்.