Powered By Blogger

திங்கள், 21 மார்ச், 2011

விபத்துக்களின் கோர விளைவுகள்

 

செப்டம்பர் 19, 1999 அன்று           எடுக்கப்பட்ட ஜேக்குலினுடைய படம்







1998 இல் ஜேக்குலினும்                 அவளது தந்தையும்
ஜேக்குலின் குழந்தையாக       இருந்த போது எடுத்த  படம்
ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் ஜேக்குலின்


ஜேக்குலின் பயணம் செய்த காரின் புகைப்படம் இது.,  குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவன் ஓட்டிவந்த கார் ஜேக்குலின் பயணம் செய்த கார் மீது மோதியது.. இது டிசம்பர் 1999 இல் நடந்தது. 
 விபத்துக்குப் பிறகு   ஜெக்குலினுக்கு 40க்கும் மேற்பட்ட        அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டனவாம்



ஜேக்குலின் எரியும் காரில் மாட்டிக்கொண்டார். அவளது உடல் மிக மோசமாக தீயில் பாதிக்கப்பட்டது




.கார் விபத்தில் மாட்டிக் கொண்ட எல்லோரும் இறந்து விடுவதில்லை.  .விபத்து நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. டாக்டர்கள் சிகிச்சை தொடர வேண்டி இருந்தது



விபத்துக்களின்  கோர விளைவுகளைப் பாருங்கள்

திங்கள், 14 மார்ச், 2011

விபத்தி்ற்கான காரணங்கள் (தொடர்ச்சி)

சாலையைப் பயன்படுத்தும் பாதசாரிகள் செய்யும் பல தவறுகள் சாலை விபத்துக்களுக்குக் காரணமாகின்றன. பாதசாரிகள் என்றால் சாலையைப் பயன்படுத்தும் யாரோ சிலர் என்று நினைக்க வேண்டாம். ஒரு விதத்தில் நாம் அனைவரும் சில நேரங்களில் பாதசாரிகள்தான். கார், வேன், பேருந்து, லாரி போன்றவற்றை ஓட்டுபவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கூட அவரவர் வாகனங்களிலிருந்து இறங்கி சாலையைப் பயன்படுத்தும்போது அவர்களும் பாதசாரிகள் தானே!
பாதசாரிகள் சாலையின் வலதுபுற ஓரத்திலேயே நடந்து செல்ல வேண்டும், அப்போதுதான் எதிரே வரும் வாகனங்களைப் பார்த்து ஒதுங்கிச் செல்ல முடியும்.. இடது புற ஓரமாக நடந்து சென்றால் நம் பின்னே வரும் வாகனமே நம்மீது மோதிவிட்டுப் போய்விடக்கூடும்.இதை மறந்து விடக் கூடாது.
“ஸீப்ரா க்ராஸிங்” என்று சொல்லக்கூடிய பாதசாரிகள் சாலையைக் கடப் பதற்கான குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சாலையைக்கடக்க வேண்டும். சாலையைக் கடப்பதற்கு வசதியாக மேம்பாலமோ அல்லது சுரங்கப் பாதையோ இருக்கும் இடங்களில் அவற்றைப்பயன்படுத்தியே சாலையைக் கடக்கவேண்டும். அவற்றைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு சாலையின் நடுவே போடப்பட்டிருக்கும் தடுப்பைத்தாண்டிக்கொண்டு சாலையைக் கடப்பது சரியான செயலாகுமா?
சிக்னல்களில் பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரியும் போது  மட்டுமே சாலையைக் கடக்கவேண்டும். வாகனம் ஏதும் வரவில்லை என்றால்கூட பச்சை விளக்கு இல்லாத நேரத்தில் கடக்கக் கூடாது. ஏனென்றால் மற்றொரு பக்கத்தில் உள்ளவர்களுக்கு பச்சை விளக்கு எரிவதால் மிக வேகமாக அந்த இடத்தைக் கடந்து விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் தங்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வரலாம் என்பதை மறந்து விடக்கூடாது.
சாலையில் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சில இடங்களில் சாலை ஓரத்திலேயே வீடுகள் இருக்கலாம். வீட்டிலிருந்து படி இறங்கி னாலே  சாலையில் கால் வைப்பதாக இருக்கும். அது போன்ற இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் கவனமாக வாகனத்தை ஓட்டவேண்டும்.
மழை நேரங்களில் சாலையில் அங்கங்கே தண்ணீர் தேங்கி நிற்கும்.. எல்லோருமே தண்ணீரில் கால் வைக்காமல் நடக்கவே முயற்சிப்பார்கள் கிட்டதட்ட சாலையின் நடுப்பகுதிக்கே கூட அவர்கள் வந்துவிடக்கூடும். அது போன்ற நேரங்களில் மிக மிக எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டிச்செல்ல வேண்டும்.
பேருந்து நிறுத்தங்களில் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிய உடன் சாலையின் மறுபக்கமிருக்கும் பள்ளிக்கூடத்திற்கோ, கல்லூரிக்கோ அல் லது வங்கிக்கோ செல்வதற்காக பேருந்தின் முன்பாகவோ அல்லது பின்பக்கமாகவோ சாலையைக்கடக்க முயற்சிப்பார்கள். அது போன்ற நேரங்களில் இதை நினைவில் வைத்துக்கொண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்து கவனமாக ஓட்டவேண்டும். .





செவ்வாய், 1 மார்ச், 2011

கனமழை விபத்துக்கள்












கனமழை விபத்துக்களை உருவாக்குகின்றன.
மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஹஸரோ நகரின் நெடுஞ்சாலை களிலும், தெருக்களிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.. மழை பெய்து கொண்டே இருப்பதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதுடன் பல பகுதிகளில் விபத்துக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன, வெள்ளத்தாலும் விபத்துக்களாலும் மக்கள் பெருந்துயருக் குள்ளாகின்றனர்.


Dense fog causes accidents in Punjab, two dead
Updated at 1040 PST Thursday, December 23, 2010



லாகூர்: பஞ்சாபில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் குறைந்த பட்சம் இரண்டு பேர் உயிரிழந்நார்கள் என ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ரவி டோல் பிளாஸா அருகில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பத்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு லாரி டிரைவர் இறந்து போனார், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
முல்டான் ரோடு என்ற இடத்தில் ஒரு வாகனம் லாரியோடு மோதிய விபத்தில் காரோட்டி கொல்லப்பட்டார்.

சாலைக்கு வரும் விலங்குகள்


விலங்குகள் சாலையில் திரியும் போது அவைகூட  விபத்தை ஏற்படுத்தக்கூடும்.