Powered By Blogger

செவ்வாய், 6 மார்ச், 2012

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் அதிகமாகிறது

"தவறு செய்பவர்களுக்கு சரியானதண்டனை கிடைக்க வேண்டும்" என்று சில நாட்களுக்குமுன் எழுதியிருந்தேன்.   


இதே கருத்து மத்திய அரசுக்கும் இருக்கிறது எனத்தெரிகிறது. அதனால்தானோ என்னவோ சாலையில் முதல் முறை செய்யும் தவறுக்கு 500 ரூபாய் அபராதமும் அதே தவறை திரும்பவும் செய்தால் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம் என சட்ட்திருத்தம் கொண்டுவர அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டமுன் வடிவு இடையூறு இல்லாமல் பாராளுமன்றத்தில் நிறைவேறுமேயானால், அதை நம் காவல் துறையினரும் சரியான முறையில் அமுல்படுத்தினால் சாலையில் நடைபெறும் தவறுகள் பெரும் அளவில் குறையவும் அதனால் விபத்துக்கள் குறையவும் வாய்ப்புக்கள் உள்ளன. காவல் துறையினர் அதுவரை காத்திருக்காமல் இப்போதுள்ள அதிகாரத்தின் படி தவறு செய்பவர்களுக்கு அபராதம் விதித்து அதை முறைப்படி வசூலித்தால் நிச்சயமாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.