Powered By Blogger

புதன், 4 ஜூன், 2014

சாலை விதிகளை மதிப்பீர் விபத்துக்களைத் தவிர்ப்பீர்

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓட்டுநர் கைது: கோபிநாத் முண்டேவின் கார் மீது மோதிய மற்றொரு கார், அங்கிருந்த சிக்னலில் நிற்காமல் வேகமாக வந்து மோதியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அந்த காரில் இருந்த குர்வீந்தர் சிங் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது 279 மற்றும் 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும், அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. 

(சிக்னலை மீறி அந்தக் கார் வந்ததால், முண்டேயின் கார் மீது மோதியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.)

போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,